செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கணவர் சாவுக்கு பழிவாங்க பல கொலைகள்... எம்.எல். ஏ கனவில் இருந்த புதுவை தாதா எழிலரசி கைது!

Mar 18, 2021 12:08:39 PM

புதுவையை கலக்கி வந்த பெண் தாதா எழிலரசி, எம்.எல்.ஏ ஆகும் ஆசையில்  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கைது செய்யப்பட்டார்.

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் சாராய வியாபாரியாக இருந்து பின்னர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.ராதாகிருஷ்ணனுக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2-வது மனைவி எழிலரசியுடன் ராதாகிருஷ்ணன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால், வினோதா ராதாகிருஷ்ணன், எழிலரசியை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு காரைக்காலில் ராதாகிருஷ்ணனும் எழிலரசியும் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் வழிமறித்து சராமரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து போக எழிலரசி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தன் கணவர் கொலைக்கு பழிவாங்க அப்போதே எழிலரசி சபதம் போட்டார். பின்னர்,வினோதா காரில் சென்ற போது சீர்காழி அருகே வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராதாகிருஷ்ணனின் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராமு, வைத்தி ஆகியோரும் வெட்டி கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் எழிலரசி இருந்ததாக தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளி வந்த எழிலரசி தன் கணவர் ராதாகிருஷ்ணன் கொலையில் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சிவக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கருதினார். கடந்த 2017 ஆம் ஆண்டு நிரவி பகுதியில் தான் கட்டி வந்த திருமண மண்டபத்தை எம்.சி. சிவக்குமார் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்தது.

முன்னாள் சபாநாயகர் கொலையிலும் பங்கு உண்டு என்பதால் எழிலரசியை போலீசார் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். சுமார் 10 மாதம் சிறையில் இருந்த அவர் கடந்த 8.11.2017 அன்று ஜாமீனில் வெளியில் வந்தார். இதற்கு பிறகும் எழிலரசி சும்மா இருக்கவில்லை. தன் கணவரின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மாநாட்டு அறையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் எழிலரசி ஆலோசனையில் ஈடுபட்ட கதையும் நடந்தது. அப்போது, போலீஸார் உள்ளே புகுந்து எழிலரசி உள்ளிட்ட அத்தனை ரவுடிகளையும் கொத்தாக அள்ளினர்.

இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளி வந்த எழிலரசி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதினார். யாருக்கும் தெரியாத வகையில் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்தார். இதற்கிடையே, இவர் மீது 4 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 6 மாதங்களாக தனிப்படை போலீஸார் இவரை தேடி வந்த நிலையில், கிடைக்க கேப்பில் பாரதிய ஜனதா கட்சியிலும் எழிலரசி தன்னை இணைத்துக் கொண்டார். இதனிடையே, நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய எழிலரசி வந்த போது, அவரை கைது செய்து போலீஸார் அழைத்து சென்றனர்.

 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement