கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் சித்தார்த்த சுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஹுப்ளி சித்தார்த்த சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியையொட்டித் திருவிழா நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.
நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.