இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசாம் மாநிலத்தில் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
21 வயதான ஹிமா தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் ஹிமா தாஸை டி.எஸ்.பி. ஆக நியமித்து அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். பணி நியமன மேடையில் பேசிய ஹிமா தாஸ், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறியுள்ளதாக கூறினார்.