உத்தரப்பிரதேசத்தில் குடம்பா எனுமிடத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த அன்சாத் பத்ருதீன் மற்றும் ஃபெரோஸ் கான் ஆகிய இரண்டு பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து பெரும் குவியலான வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.
போலியான அடையாள அட்டைகள், செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நகரங்களில் தீவிரவாதத்தை பரப்பி வன்முறையை ஏற்படுத்த நினைத்த அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.