செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்ட எமதர்ம ராஜா...போலீஸ் அதிகாரியின் விழிப்புணர்வு முயற்சி!

Feb 11, 2021 06:36:55 PM

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் எமதர்ம ராஜா வேடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கொரோனா நோய்த்தொற்று உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர்.

பணிச் சுமையுடன் உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு, மக்களைக் காப்பாற்றக் களம் இறங்கிய முன்கள பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 7௦ லட்சத்திற்கும் மேலான முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சப்பட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து , மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறை அதிகாரி ஜவகர் சிங்க, எமதர்ம ராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மருத்துவமனைக்கு கூலிங் கிளாஸ்சும், தலையில் கிரீடமும்,கருப்பு நிற சட்டையும் அணிந்து வந்த ஜவகர் சிங்க, கொரோனா தடுப்பூசி பற்றிக் கூறுகையில், முன்கள பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே எமதர்ம ராஜா வேடத்தில் வந்ததாகவும் கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜவகர் சிங்க, எமதர்ம ராஜா வேடம் அணிந்து, காவல்துறை வாகனம் மேல் அமர்ந்து, மக்கள் அனைவர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement