செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுரங்கத்தில் சிக்கிய 35 பேர் - இடைவிடாமல் நடக்கும் மீட்பு பணி

Feb 09, 2021 08:06:51 PM

த்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பனிப்பாறைகள் உடைந்ததன் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிலச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரோவின் ஒரு அங்கமான ஐஐஆர்எஸ் நிறுவனம் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 5600 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், 14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரிஷிகங்காவின் கீழ்நிலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத், சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு ஜோஷிமத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 12 தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரிவேந்திரசிங் ராவத், தபோவனத்திலுள்ள சுரங்கத்திற்குள் ஏறத்தாழ 35 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் இடைவிடாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மீட்பு படையினர் மலரி பள்ளத்தாக்குப் பகுதியை சென்றடைந்திருப்பதால், தேவையான உணவுப் பொருட்களை அங்குள்ள மக்களுக்கு எளிதாக வழங்க முடியும் என்றும் திரிவேந்திரசிங் ராவத் குறிப்பிட்டடார்.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement