செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிட்டாக பறந்த மஜ்னு.. டிக்கெட்டால் சிக்கிய லைலா..! இதுவும் காதல் கோட்டை தான்

Feb 07, 2021 07:58:24 AM

சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்பி வைக்க வந்த இளம் பெண் ஒருவர், விமானம் ஏறும் வரையிலும் கணவர் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில், போலி விமான டிக்கெட் தயாரித்து சென்னை போலீசில் சிக்கிக் கொண்டார். திருமணமான சில தினங்களில் தன்னை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவரை சில நிமிடங்கள் கூட பிரிய மனமில்லாமல் பாசக்கார மனைவி எடுத்த ரிஸ்க் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த 25 வயது இளைஞர் நவாஸ் சேக் மற்றும் 23 வயதான அவரது மனைவி சனா இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

விமான பயணிகளுக்கான இ டிக்கெட்டை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு உள்ளே சென்றனர். அத்தோடு அதே டிக்கெட்டை காண்பித்து பாதுகாப்பு சோதனை பகுதிக்குள்ளும் இருவரும் ஒன்றாகவே சென்றனர்.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம் பெண் சனா மட்டுமே தனியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்த போது தான் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக சனா தெரிவித்தார்.

தனது கணவர் மட்டுமே விமானத்தில் பயணிக்கிறார் என்று கூறிய சனா, தான் விமான நிலையத்திற்குள் செல்லும் போது கேட்டில் காண்பித்து விட்டு சென்ற இ டிக்கெட்டையும் காண்பித்தார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. அந்த டிக்கெட்டில் ஒரு பயணிக்குரிய பி.என்.ஆர் எண் மட்டுமே இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் , சனாவை வெளியில் விடாமல் தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் கணவருக்கு பெறப்பட்ட இ-டிக்கெட்டில் தன்னுடைய பெயரை சேர்த்து கலர் ஜெராக்ஸ் எடுத்து போலியான விமான டிக்கெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட சனா, அதற்கான காரணத்தையும் கண்ணீர் மல்க விவரித்தார்.

அண்மையில் தான் சனாவுக்கும், நிவாஸிற்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மீது தீராத காதலும் அன்பும் கொண்ட சனாவால், கணவர் தன்னை பிரிந்து வெளி நாடு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வேலைக்கு செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க செல்லும் சாக்கில் உடன் சென்றுள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் கூட தன் கணவனை விட்டு பிரிந்திருக்க மனமில்லாத சனா, கணவனுடன் விமான நிலையத்திற்குள் சென்று ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக கணவர் நவாசிற்கு எடுக்கப்பட்ட இ டிக்கெட்டில் தன்னுடைய பெயரை சேர்த்து முன் கூட்டியே கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டார்.

வீட்டில் அவரை வழியனுப்ப செல்வதாக கூறி கணவருடன் சென்னை விமானநிலையம் சென்ற சனா, போலி டிக்கெட் மூலம் எளிதாக விமான நிலையத்திற்குள் தடையின்றி நுழைந்துள்ளார். பின்னர் விமானம் ஏறும் வரை தனது கணவருடன் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த சனா, தனது கணவனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்து விட்டு கணவரின் விமானம் வானில் பறக்க ஆரம்பித்ததும் அங்கிருந்து வெளியே வந்ததாக கூறியுள்ளார்.

தான் செய்தது தவறு தான் என்றாலும் கணவர் மீது கொண்ட அளவுக்கதிகமான காதல் காரணமாக இப்படி செய்ததாக கூறி கண்ணீர்விட்ட சனா தன்னை மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இது போன்ற செயல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டி சனாவை கைது செய்து,சென்னை விமானநிலைய காவல் நிலைய மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே சனா, எந்த இண்டர் நெட் செண்டரில் போலியான டிக்கெட்டை தயார் செய்து பிரிண்டு எடுத்தார், உண்மையிலேயே கணவர் மீதான பாசம் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது உள் நோக்கமா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அவரை சொந்த ஊரான ஹைதராபாத் அழைத்துச்சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கணவன் மீதுள்ள அன்புக்காக சிறைக்கு செல்லும் அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கும் பாசக்கார மனைவிகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement