செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொதுபட்ஜெட்... நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2021 11:07:09 AM

2021 - 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் சலுகைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தற்போது தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை முழுவதும் காகிதமில்லா வகையில் டிஜிட்டல் பட்ஜெட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் நிதி நிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் நிதி நிலை அறிக்கையின் விபரங்கள் உடனுக்குடன் இணையதளத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதி நிலை அறிக்கையில், வருமான வரி தொடர்பான சலுகை இருக்குமா என அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதேபோல் கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் நலிந்து போன சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகள் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பொருளாதார முன்னேற்றத்திற்காக 210 பில்லியனுக்கும் அதிகமான ரூபாயைத் திரட்டும் வகையில் பல உயர்தர பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் உணவுக்கான மானிய ஒதுக்கீடு 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சுகாதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது. 

ஆனால் பெருந்தொற்று காலத்தில் ஏற்கனவே சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதால் தற்போது தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement