புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 23 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் பாஜக சார்பில் 'மலரட்டும் தாமரை ஒளிரட்டும் புதுவை' என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா பங்கேற்று உரையாற்றினார். முதலமைச்சர் நாராயணசாமியால் புதுச்சேரியின் வளர்ச்சி 70 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதியார் சிலைக்கு ஜே.பி. நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.