செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாப்பாவ காணோம்..! பாப்பாவே பிறக்கவில்லை..! குழப்பத்தில் போலீஸ்

Jan 18, 2021 07:09:59 AM

திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் எதிர் புகார் அளித்த சம்பவத்தால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா, திருப்பதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில் கர்ப்பிணியாக இருந்த தான் கடந்த 5 ந்தேதி திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றதாகவும், தன்னை பரிசோதித்த மருத்துவர்கள், 16 ஆம் தேதி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும், அதன்படி மருத்துவமனையில் சென்று சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை தனக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் தனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்று கூறும் சசிகலா, அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் தான் பெற்ற குழந்தையை தன்னிடம் கொடுக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அங்குள்ள டாக்டர்கள், சசிகலாவுக்கு கர்ப்பமே ஏற்படவில்லை என்றும் அவர் கர்ப்பிணியாக நடித்து உறவினர்களை ஏமாற்றியது போல, மருத்துவர்களையும் ஏமாற்றப் பார்ப்பதாக சசிகலா மீது திருப்பதி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருத்துவர்கள் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சசிகலா மற்றும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

தான் கர்ப்பமாக இருந்ததற்கு ஆதாரமாக சசிகலா வளைகாப்பு தொடர்பான போட்டோ, மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகள் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் அளித்துள்ளார்.

இதனால் குழம்பிபோன போலீசார், சசிகலாவுக்கு பிரசவம் நடைபெற்றதா? இல்லையா ? என்பதை கண்டறிய, வேறு டாக்டர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement