அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நன்கொடைகள் திரட்டும் பணி தொடங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சொந்த சேமிப்பில் இருந்து 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி இதனைத் தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் உள்ள 65 கோடி இந்துக்களிடம் நிதிதிரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விஷ்வ இந்து பரிஷத்தின் செயல்தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராமர் கோவில் கட்ட ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.