உத்தரப்பிரதேசத்தில் கழுதைச் சாணத்தைக் கலந்து வீட்டு உபயோக மசாலா பொருட்கள் தயாரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவிப்பூர் என்ற இடத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மசாலா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த ஆலையை சோதனை செய்த போது, அங்கு கழுதைச் சாணம், வைக்கோல், அமிலங்கள் மூலம் மசாலா பொருட்கள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்து யுவ வாகினி என்ற அமைப்பின் அலுவலக பொறுப்பாளராக இருக்கும் அனூப் வர்ஷினி என்பவரைக் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.