செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எல்லையில் சீனாவும், பாகிஸ்தானும், வாலாட்டினால்.. ஒரே நேரத்தில் அட்டாக்..! தயாராகும் நமது ராணுவம்

Dec 12, 2020 12:55:41 PM

எல்லையில், சீனாவும், பாகிஸ்தானும், ஒரே சமயத்தில் அத்துமீறினால், இரண்டு நாடுகளையும், சமாளித்து கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், இரட்டை படையணி அமைப்பை ஏற்படுத்துவதில், இந்திய ராணுவம் தீவிரம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதல், சீனா அத்துமீறுவதால், பதற்றம் ஏற்பட்டிருப்பதோடு, இந்திய ராணுவமும், நவீன ஆயுதங்களோடு, தனது துருப்புகளை குவித்துள்ளது.

இதேபோன்று, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், பல்வேறு வகைகளில் அத்துமீறுவதும், தனது மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை ஏவி விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சீனா ஒருபுறம், பாகிஸ்தான் மறுபுறமும், எல்லைகளில் அத்துமீறுவதோடு, நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து, தோற்று வருகின்றன.

எனவே, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட, இந்திய ராணுவம் திடமாக முடிவெடுத்திருக்கிறது.

சீனா அத்துமீறும்போதும், அங்கு முழு கவனத்தை திருப்புவதோடு, ஏராளமான படையணிகளை லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நகர்த்த வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் அத்துமீறினால், அதை சமாளித்து முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருந்தாலும், படையணிகளை நகர்த்துவதற்கு, சற்று தாமதமாக நேரிடும் வாய்ப்பும் உண்டு....

ஒரே நேரத்தில், சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் வகையிலும், இரட்டை போர் யுத்த படையணி அமைப்பை உருவாக்குவது குறித்து, இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இரட்டை படையணி அமைப்பை உருவாக்கும் போது, இருவேறு நாடுகளுடனான எல்லைப் பகுதி பாதுகாப்பிற்கும், இருவேறு போர் தளபதிகள் நியமனம் செய்யக்கூடும். இதன்மூலம், சீனா அத்துமீறும்போதும், அதற்கான இந்திய ராணுவ போர் தளபதியும், பாகிஸ்தான் ராணுவம் அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறும்போது, அதற்கான இந்திய ராணுவப் போர் தளபதியும், உடனடியாக, அவரவர் துருப்புகள், இராணுவ அதிகாரிகளோடு, கலந்தாலோசித்து, பதில் தாக்குதலை, விரைவாக தொடுக்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, இரட்டை யுத்த படையணி அமைப்பே, சரியான செயல்பாடாக அமையும் என, இந்திய இராணுவம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement