ராஜஸ்தானை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழந்தார்.
ராஜ்சமந்த் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரண் மகேஸ்வரி, கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரண் மகேஸ்வரிக்கு வயது 59. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.