இந்திய பிரதமராக இருந்த காலத்தில் மன்மோகன் சிங், நேர்மையானவராகவும், தொலைநோக்கு சிந்தனை உள்ளளவராகவும், அப்பழுக்கற்ற சுத்தமான தலைவராகவும் இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பாராட்டி உள்ளார்.
A Promised Land என்ற தமது சுயசரிதையில் இதை குறிப்பிட்டுள்ள அவர், மன்மோகன் சிங் ஒரு அபூர்வமான அறிவாளியும், நாகரீகமான மனிதரும் ஆவார் என புகழாரம் சூட்டி உள்ளார்.
அதே நேரம், காலங்காலமாக அமெரிக்க உறவு குறித்து இந்திய அதிகாரிகளிடம் நிலவும் ஐயங்களுக்கு உட்பட்டே அவர் எச்சரிக்கையுடன் அமெரிக்க உறவை கடைப்பிடித்தார் என்றும் ஒபமா குறிப்பிட்டுள்ளார்.