கர்நாடக மாநிலம் கலபுரகியில் செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த நர்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொல்லூருவைச் சேர்ந்த சித்தம்மா என்பவர் பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
மின்தடை, இன்வெட்டர் பழுது மற்றும் மின் ஊழியர்களைத் தொடர்பு கொள்ள முடியாத சூழலால் பணியில் இருந்த நர்சு நாகேஷ்வரி, செல்போனில் உள்ள டார்ச்லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்தார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் சித்தம்மாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் நலமாக உள்ளனர்.