கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய அதன் தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் இயக்கப்படும் 736 சிறப்பு ரயில்களில், 327 ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் வரை பயணிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மும்பையைத் தவிர மேலும் சில நகரங்களிலும் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.