இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 45,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 496 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 29 ஆயிரத்து 313ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 607ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து 53,285 பேர் குணமானதால், குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்து 44 ஆயிரத்து 798ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,550 குறைந்ததால், அந்த எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 908ஆக சரிந்துள்ளது.