வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்துமாறு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.