தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும், முதற்கட்டமாக 30 கோடி பயனாளர்களை அடையாளம் காணும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, பாஜக அறிவித்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.