இந்தியாவிற்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கும் ஒப்பந்தத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மத்திய அரசிற்கு கடனாக வழங்கப்பட உள்ளது. இந்த நிதியின் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில், குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற பகுதிகளின் உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.