செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஹத்ராஸ் நோக்கி ராகுல் பயணம்; 5 பேர் மட்டும் செல்ல அனுமதி

Oct 03, 2020 04:38:57 PM

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பலியான இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அவர்கள் ஹத்ராஸ் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மனீஷா வால்மீகி என்கிற இளம்பெண்ணை 4 பேர் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கடுமையாகத் தாக்கினர். இதில் நினைவிழந்த அந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். பெண்ணின் உடலைக் காவல்துறையினரே தகனம் செய்துவிட்டனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க வியாழனன்று ராகுல்காந்தியும் பிரியங்காவும் சென்றபோது நொய்டாவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் ஒரு காரில் பயணம் மேற்கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். உத்தரப்பிரதேச எல்லையில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல், பிரியங்கா ஆகியோருடன் 5 பேர் மட்டுமே ஹத்ராசுக்குச் செல்ல அனுமதி அளித்ததுடன் மற்ற அனைவரையும் திரும்பிச் செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தொண்டர்களை அமைதிப்படுத்திய பின் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட குழுவினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஹத்ராஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


Advertisement
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement