செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியா- சீனா எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை...

Sep 11, 2020 06:39:52 AM

இந்தியா -சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதே மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங்--யீயை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.

லடாக் எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ள பதற்றம் மிக்க சூழலை தணிப்பது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

சீனாவைக் குறித்த இந்தியாவின் அரசுகொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

முன்வரிசையில் உள்ள படைகளை இருதரப்பினரும் உடனடியாக திரும்பப் பெற்றால் பதற்ற நிலை தணியும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத்தீர்வை எட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.எல்லையில் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழாதிருக்கவும் அத்துமீறல்களைத் தடுக்கவும் படைகளைக் குவித்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்திய-சீன நட்புறவு தற்போது திசைதவறிவிட்டதை சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இருதரப்பினரும் சரியான அணுகுமுறையைக் கையாண்டால் மீண்டும் உறவுகள் சீரடையலாம் என்றும் சீன அமைச்சர் வாங்-யீ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் பதற்றத்தைத் தணிக்கவும் படைகளைத் திரும்பப்பெறவும் இருநாடுகளுக்கும் இடையே 5 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement