செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தாயும் உடன்பிறந்தவர்களும் பலி... உயிர் பிழைத்தாலும் தனிமரமான சிறுவன்!

Aug 27, 2020 12:28:35 PM

மகாராஸ்டிர மாநிலம் ராய்காட்டில் நடந்த கட்டட விபத்தில் 19 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட சிறுவனின் தாயும், சகோதரியும் இறந்து போய்விட்டனர். இந்தத் தகவலை சிறுவனிடத்தில் சொல்ல முடியாமல் அவனின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ராய்காட் மாவட்டம் காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலிருந்து 19 மணி நேரம் கழித்து முகமது நதீம் பாங்கி என்ற சிறுவன் மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டான். முகத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன் சிகிச்சைக்கு பிறகு ஆகஸ்ட் 26- ஆம் தே வீடு திரும்பினான்

தற்போது, சித்தியின் அரவணைப்பில் சிறுவன் இருக்கிறான். சிறுவன் உயிர் தப்பினாலும் அவனின் தாய் தாய் நவுசிக் நதீம் சகோதரிகள் ஆயிஷா , ருக்காயி ஆகியோர் இந்த விபத்தில் பலியானது உறவினர்கள் கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

சிறுவன் மருத்துவமனையில் இருக்கும் போதே, அவனின் தாயார், சகோதரிகளின் உடல்கள் அடக்கமும் செய்யப்பட்டு விட்டன. உயிர் பிழைத்தாலும் கடைசி ஒரு முறையாக தாயின் முகத்தையும் உடன் பிறந்தவர்களின் முகத்தையும் காண முடியாத பரிதாப நிலை சிறுவன் முகமது பாங்கிக்கு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். சிறுவன் முகமது பாங்கியின் தந்தை துபாயில் பணி புரிந்தார். அவராலும் உடனடியாக தாயகம் திரும்பி, மனைவி மற்றும் மகள்களின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாத நிலை உருவானது.

சிறுவன் முகமது பாங்கி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதிலிருந்து அம்மாவை எங்கே அக்காவை எங்கே தங்கையை எங்கே என்று கேட்டவாரே இருக்கிறான். சிறுவனின் உறவினர்களோ அவனிடத்தில் கூற தயங்கிக் கொண்டும் தவித்து கொண்டும் இருக்கின்றனர்.

தாய், தந்தை, அக்காள், தங்கை என்று சகல உறவுடன் வாழ்ந்த சிறுவன் தற்போது தனிமரமாகி நிற்பதுதான் வேதனையிலும் வேதனை!


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement