செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வட்டி தள்ளுபடிக் கோரிக்கை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Aug 26, 2020 05:21:24 PM

கொரோனா பேரிடரால் கடன் தவணை செலுத்துவதைத் தள்ளி வைத்த 6 மாதக்காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிக் கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவதை மார்ச் முதல் ஆகஸ்டு வரை 6 மாதக் காலத்துக்குத் தள்ளி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்தக் காலத்தில் கடன்மீதான வட்டிக்கு வட்டி கணக்கிடப்பட்டு முதலில் சேர்க்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இந்நிலையில் கடன் தள்ளிவைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரித் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக்பூசண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், வங்கிகளுக்குச் சார்பாகவும் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். போதிய அதிகாரங்கள் உள்ளபோதும், மத்திய அரசு உரிய முடிவெடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்துகொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடன் தவணை செலுத்துவதைத் தள்ளி வைத்த 6 மாதக்காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதா, வட்டி மீதான வட்டியைத் தள்ளுபடி செய்வதா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வணிகத்தை மட்டுமே எண்ணிப் பார்க்காமல், மக்களின் நிலையையும் அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement