நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை செப்டம்பர் 14 முதல் அக்டோபர் முதல் தேதி வரை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
சனி , ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் நான்கு மணி நேரம் வரை கூட்டத் தொடரை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 18 அமர்வுகள் கொண்ட தொடராக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.