செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டெல்லி ஷாகீன் பாக்கில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராடியவர்களில் 200 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக தகவல்..!

Aug 18, 2020 12:34:43 PM

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில், ஷாகீன்பாக் என்ற இடத்தில் ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் பின்னால் இருந்து இயக்கினர்.

கிட்டத்தட்ட 101 நாள்கள் நடந்த இந்த போராட்டம் கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைந்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களில் சமூக சேவகர் ஷாஷாத் அலி, டாக்டர். மெக்ரின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தபாஸம் ஹூசைன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் பரத்வாஜ் நேற்று கூறுகையில், '' ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததில் ஆச்சரியமில்லை டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்துக்காக பாரதிய ஜனதா கட்சியால் திட்டமிட்டு ஷாகீன்பாக் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பின்னணியில் இருந்து இயக்கியதே பாரதிய ஜனதா கட்சிதான் '' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மனோஜ் திவாரி,'' பாரதிய ஜனதா கட்சி மதம், சாதி, இன அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை . இஸ்லாமிய சகோதர சகோதரிகள் பாரதிய ஜனதாவுடன் கைகோத்து நடக்க விரும்புகிறார்கள் . அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் மக்களை பிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா அனைத்து மதங்களையும் சமமாகவே பாவிக்கிறது'' என்று கூறியுள்ளார்.


Advertisement
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement