நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 191 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வருவாய் நுண்ணறிவுப்பிரிவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குழாய்களில் அடைத்து வைத்து கடத்தப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. பிடிபட்ட போதை மருந்தின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.