செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விமான விபத்து ; விசாரணை தொடக்கம்

Aug 09, 2020 07:26:47 AM

கேரளாவில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விபத்திற்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை புலனாய்வு பிரிவு தனது விசாரணை தொடங்கியுள்ளது. 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 186 பேருடன் கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் Boeing 737 ரக விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தரையிறங்க முயன்றது.

அப்போது கனமழை பெய்ததால் விமானம் வழுக்கிக்கொண்டு சென்று ஓடுதளத்தில் இருந்து 35 அடி பள்ளத்தில் விழுந்து இரு துண்டுகளாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி, இணை விமானி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விமானிகளின் கடைசிநேர உரையாடல் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டி, விமானம் எப்படி இயக்கப்பட்டது என்பதை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்திருக்கும் கருவி ஆகியவற்றை விமானத்தில் இருந்து மீட்டனர். விமான விபத்துக்கான காரணங்களை தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஆதாரமாக கருதப்பட்ட இந்த சாதனங்கள் பகுப்பாய்விற்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதனிடையே விபத்து நடந்த கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து விமான பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்றடைந்தனர். அங்கு பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்தினர்.

விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா அல்லது மனித தவறு காரணமா என்பது விரைவில் தெரியவரும் என விமான விபத்து புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் சுமார் எட்டாயிரம் அடி நீளமுள்ள ஓடுபாதை போயிங் ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு போதுமானது எனக்குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போது விபத்துக்குள்ளான விமானம் 3000 அடி தூரத்தில் தரையிறங்கியுள்ளதாக கூறினார். எனவே கருப்புப்பெட்டி சரிபார்த்த பின்னரே விபத்து குறித்து தெளிவாக கூறமுடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


Advertisement
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement