கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாநில வனத்துறை அமைச்சரும், பல்லாரி தொகுதி பொறுப்பாளருமான பி.எஸ். ஆனந்த் சிங் நேற்று கொரோனா சோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அறிகுறிகள் அற்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆனந்த் சிங் ஹொசப்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பு மருத்துவமனையை பார்வையிடச் சென்றபோது பாதுகாப்பு உடை அணியவில்லை என்று கூறப்படுகிறது.