செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

எல்லையில் ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் புறப்பட்டார்

Jul 17, 2020 06:59:25 AM

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் வாபஸ் பெற்று வரும் நிலையில்,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளார். சீனா வாபஸ் பெற்ற பகுதிகளை 10 நாட்களுக்கு ஆய்வு செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. 

லடாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற 14 மணி நேரப் பேச்சுவார்த்தையின் போது படைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ளுமாறு இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கல்வான் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக் கொண்டபோதும் ஃபிங்கர் மலைத்தொடரின் சில பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் அமைதிப் பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியவும் களத்தில் நிற்கும் வீரர்களை சந்தித்து உரையாடவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார். ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும் ராஜ்நாத் சிங் உடன் செல்கின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில பகுதிகளுக்கும் ராஜ்நாத்சிங் செல்ல திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து முழுமையாக படைகளை விலக்குவதற்கு இந்தியா மற்றும் சீனா ராணுவ தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீன படைகள் பின்வாங்கி விட்டன. ஃபிங்கர் போர் என்ற இடத்திலும் கணிசமான படைகள் குறைக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை விலக்கிக் கொண்டதா என்பதை அடுத்த பத்து நாட்களுக்கு ஆய்வு செய்ய இந்திய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை லடாக் புறப்பட்டுச் சென்றுள்ள ராஜ்நாத்சிங் இதுகுறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement