செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

8 வருடங்கள், 263 கோடி ரூபாய்... பீகாரில் திறக்கப்பட்ட 29 நாளில் இடிந்து விழுந்த பாலம்!

Jul 16, 2020 02:05:21 PM

பீகாரில் கண்டகி ஆற்றின் குறுக்கே ரூ. 263 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் ஒன்று, திறக்கப்பட்ட 29 நாள்களில் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்டத்தில், கண்டகி ஆற்றின் குறுக்கே ரூ.263 கோடி செலவில் கட்டப்பட்டது, சட்டர்காட் பாலம். இது கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சாம்பரன் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பயணத் தொலைவைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டது. எட்டு வருடங்களாக நடைபெற்ற கட்டுமானப் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார்  கடந்த ஜூன் 16 - ம் தேதி பாலத்தைத் திறந்துவைத்தார். இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. மழை, வெள்ளம் ஏற்படும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழையால் கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சட்டர்காட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பாலம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இடிந்து விழுந்திருக்கும் சம்பவத்தால் மாநில முதல் அமைச்சரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் டாக்டர் மதன் மோகன், "ஜூன் 16 ம் தேதி திறக்கப்பட்ட பாலம் ஜூலை 15 - ம் தேதி இடிந்து விழுந்துள்ளது. இந்த முறையும் பழியை அப்பாவி எலிகள் மீது போடாதீர்கள்" என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கு முன் 2017 ம் ஆண்டு ஆற்றுப் பாலங்கள் இடிந்த போது நித்திஷ் குமாரின் கேபினட் அமைச்சர் ஒருவர், "எலிகள் பாலத்துக்கு அடியில் குழி தோண்டி ஓட்டைப் போட்டு, அடித்தளங்ளை பலவீனப்படுத்துகின்றன. அதனால் தான் பாலங்கள் இடிந்து விழுகின்றன. அதனால் தான் ஆற்றிலிருந்து வெள்ளப்பெருக்கும்  ஏற்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். இதே போன்று மதுபானங்கள் காணாமல் போனபோதும் பீகார் காவல் அதிகாரிகள் எலி மீது பழியைப் போட்டுத் தப்பிக்கொண்டனர்.

இந்த நிலையில், திறந்து வைத்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது!

 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement