செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்திய-சீனா 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

Jun 22, 2020 06:51:21 PM

லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதத்தில், இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

கிழக்கு லடாக் எல்லை பிரதேசமான சூஷுல் ((Chushul )) பிரிவில் சீனப்பகுதியான மோல்டாவில் ((Moldo)) இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கால்வான் தாக்குதலுக்கு முன்பாக, கடந்த 6 ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே இதே மட்டத்திலான அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தி, இருதரப்பும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்தைதையில் இந்தியாவின் சார்பில் 14 ஆவது கோர் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீனா தரப்பில் திபெத் ராணுவ மாவட்ட அதிகாரியும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 ஆம் தேதி நடந்த கால்வான் தாக்குதலுக்குப் பிறகு, பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாடுகளின் மேஜர் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்தில் 3 முறை தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கடந்த புதன் அன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ((Wang Yi)) உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன ராணுவத்தின் தாக்குதலை திட்டமிட்ட ஒன்று என வன்மையாக கண்டித்தார்.
கால்வான் தாக்குதலுக்குப் பிறகு சுமார் 3500 கிலோ மீட்டர் தூரமுள்ள இரு நாட்டு எல்லையில், அசாதாரண சூழல்களில், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை நமது வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் எல்லை ஒப்பந்த விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்


Advertisement