செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

'இஸ்லாமாபாத்தில் திடீரென்று காணாமல் போயிருக்கும் இந்திய உயர் அதிகாரிகள்' - பழிவாங்கும் நடவடிக்கையா? 

Jun 15, 2020 06:02:32 PM

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பணியாற்றிவந்த இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள் இருவர் திடீரென்று காணாமல் போயிருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இரண்டு உயர் அதிகாரிகளையும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்புகொள்ள முடியவில்லை, உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியிருக்கிறது.



இதற்கு முன்பு, டெல்லியில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியது. மே மாதம் 31 - ம் தேதி, டெல்லி கரோல் பா பகுதியில் இருவரிடமிருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து இருவரும் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் கூறி ஜூன் 1 - ம் தேதி பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு தூதரக அதிகாரிகளும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா தொடர்பான பகுதியில் பணியாற்றிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இருவரிடமிருந்தும் நசீர் கோதம் எனும் போலியான ஆதார் கார்டு, இரண்டு ஆப்பிள் போன்கள், 15000 ரூபாய் ரொக்கப்பணம், ஆகியவையும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாகத் தான் இரண்டு இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 'வியன்னா மாநாடு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானில் பணியாற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பாகிஸ்தான் அரசு உறுதிசெய்ய வேண்டும்' என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரியுள்ளது.  

இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதன்படி பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையது ஐதர் ஷா வெளியுறவு அமைச்சகத்துக்குச் சென்று விளக்கம் அளித்தார். அப்போது இந்திய அதிகாரிகள் இருவரையும் அவர்களின் காருடன் இந்தியத் தூதரகத்துக்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என அவரிடம் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement