செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கொரோனாவால் இறந்து போன மூதாட்டியின் உடல் 8 நாள்கள் கழிவறையில் கிடந்த பரிதாபம்! - மகாராஷ்டிராவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...

Jun 11, 2020 04:48:18 PM

கொரோனோ வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் காணாமல் போன  82 - வயது பாட்டியின் உடல் எட்டு நாள்களாக கழிவறையில் கிடந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா, ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த புசாவால் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி சளி, இருமல், காய்ச்சலுக்காக ஜல்கான் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஜல்கான் சிவில் மருத்துவமனையானது ஜல்கான் மாவட்டத்தின் கோரோனோ சிகிச்சை மையமாகத் திகழ்கிறது. ஜூன் 1 - ம் தேதி,  வார்டு எண் 7 - ல் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நடந்த சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அவர் காணாமல் போனார். அவரைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால், எட்டு நாள்கள் கடந்த நிலையில் அவரது உடல் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், "ஜூன் 2 - ம் தேதி மூதாட்டி காணாமல் போனது பற்றி உறவினர்களுக்கும் காவல் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவிக்கிறது. ஆனால், காவல் துறை கண்காணிப்பாளர், "முதியவர் காணாமல் போனது பற்றி ஜூன் 6 - ம் தேதிதான் எங்களுக்குப் புகார் வந்தது. இந்த சம்பவம் பற்றி விரிவாக விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். காவல் துறையினரும் மருத்துவமனை நிர்வாகமும் முரண்பட்ட தகவலைக் கூறுகிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு ஜல்கான் மாவட்ட பாதுகாவலர் அமைச்சர் குலாபராவ் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த குற்றச் சம்பவத்துக்கு யார் காரணமோ அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஜல்கான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவினாஷ் தாக்னே, "இது மன்னிக்க முடியாத குற்றம். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வந்த பாட்டி கழிவறையில் 8 நாட்களாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவறையை சுத்தம் செய்வதற்குக் கூட செல்லவில்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த சம்பவம் கொரோனா வைரசால் மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்பு உருவாவதையே காட்டுகிறது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement