செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

'கைதட்டுகிறார்கள், பாராட்டுகிறார்கள்; மூன்று மாத சம்பளமும் இல்லை! '- பரிதாபத்தில் டெல்லி டாக்டர்கள்

Jun 11, 2020 11:32:28 AM

கொரோனா காரணமாக நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஓய்வில்லாமல் மருத்துவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் அளிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கஸ்தூரபா காந்தி மருத்துவமனை ரெசிடென்ட் டாக்டர்கள் சங்க தலைவர் சுனில் குமார் கூறுகையில், '' மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளம் இன்னும் தரவில்லை. போராட்டத்தில் ஈடுபட இது தகுந்த காலமில்லை. அதனால், போராட்டம் அறிவிக்கவில்லை. ஆனால், மொத்தமாக ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறோம். அதேவேளையில், எங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள மாட்டோம். வேறு ஏதாவது மருத்துவமனையில் சேவை புரிவோம் .

மக்கள் எங்களை பாராட்டி கைதட்டுகிறார்கள். கொரோனா வாரியர்ஸ் என்று புகழ்கிறார்கள் . ஆனால், எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்பதை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூன் 16- ந் தேதிக்குள் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லையென்றால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் எங்கள் பிரச்னையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

கஸ்தூர்பா மருந்துவமனை 450 படுக்கை வசதி கொண்டது. 1000 சீனியர் டாக்டர்கள், 500 ரெசிடென்ட் டாக்டர்கள். 1,500 செவிலியர்கள் இங்கு பணி புரிகின்றனர். இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement