செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெட்டுக்கிளிப் பாதிப்பு உதவுவதாக பிரதமர் மோடி உறுதி

May 31, 2020 06:30:28 PM

பொருளாதாரம் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் ஹரித்துவார் வரை அனைவரும் யோகாவைத் தீவிரக் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். 

மனத்தின் குரல் என்னும் தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தின் பெரும்பகுதி இயங்கி வரும் நிலையில், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் ஆதரவாலும் கொரோனாவுக்கு எதிராக வலிமையுடன் போராட முடிவதாகவும், சிக்கலான நேரத்திலும் கொரோனாவுக்கு எதிராகப் போரிடும் புதிய வழிகளைக் கண் Mann Ki Baatடுபிடிக்கும் முயற்சியில் ஆய்வகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற நாடுகளைப் போல் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவவில்லை என்றும், இறப்பு விகிதமும் குறைவு என்றும் குறிப்பிட்டார்.

ஊரடங்கால் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழைகளும் தொழிலாளர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வலிகளும் துயர்களும் சொல்லில் அடங்காதவை என்றும் குறிப்பிட்டார். 

நாட்டின் பல மாநிலங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, சிறு பூச்சிகளால் எவ்வளவு சேதம் ஏற்படும் என்பதை வெட்டுக்கிளிப் படையெடுப்பு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.

வெட்டுக்கிளிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்தார்.

மத்திய மாநில அரசுகள் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தார்.

உலகத் தலைவர்கள் பலருடன் தான் பேசிய போது அவர்கள் யோகா, ஆயுர்வேதா ஆகியவற்றில் பெரிதும் ஆர்வம் காட்டியதாகவும், அவற்றைப் பற்றித் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

உடல்நலத்துக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்கிற விழிப்புணர்வை மக்கள் பெற்றுள்ளதாகவும், ஹாலிவுட் முதல் ஹரித்துவார் வரையுள்ள மக்கள் வீட்டில் இருந்து யோகாசனம் செய்வதில் தீவிரக் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

யோகா, ஆயுர்வேதாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவற்றைப் பின்பற்றவும் விரும்பும் எல்லோரும் இணையத்தளத்தின் வழியாக அதைக் கற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சமுதாயத்துக்கும், எதிர்ப்பாற்றலுக்கும், ஒற்றுமைக்கும் யோகா நல்லது எனத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நமது சுவாச அமைப்பைப் பாதிப்பதாகவும், யோகாசனத்தின் மூச்சுப் பயிற்சியால் சுவாச அமைப்பு வலுப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகளின் படிப்புக்காகச் சேமித்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய மதுரையைச் சேர்ந்த முடி திருத்தும் கடைக்காரருக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரையில் மேலமடையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் மோகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

தனது மகளின் படிப்புக்குச் சேர்த்து வைத்த 5 லட்சம் ரூபாயை இதற்காகச் செலவிட்டுள்ளார். ஏராளமானோர் உதவி தேடி வரும் நிலையில் தேவைப்பட்டால் மனைவியின் நகைகளை அடகு வைத்தும், நிலத்தை விற்றும் உதவி செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு உதவச் செலவிடும் பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் ஈட்டிவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோகனின் உதவி பற்றி அறிந்த பிரதமர் மோடி வானொலியில் பேசியபோது, மகள் படிப்புக்காக வைத்திருந்த பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

ஏழை, எளியோருக்கு செய்த உதவிக்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக முடி திருத்தும் தொழிலாளி மோகன் தெரிவித்துள்ளார்.

எதார்த்தமாக செய்த உதவிக்கு பிரதமரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என நினைக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

வறுமையால் தங்கள் குடும்பம் சந்தித்த கஷ்டமான அனுபவத்தை சுற்றி உள்ளவர்கள் யாரும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணியே உதவி செய்யுமாறு தனது பெற்றோரை வலியுறுத்தியதாக சிறுமி நேத்ரா தெரிவித்துள்ளார்.

class="twitter-tweet">

#MannKiBaat May 2020. Tune in. https://t.co/cyDovLkUrm

— Narendra Modi (@narendramodi) May 31, 2020


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement