செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வடஇந்தியாவில் விளைநிலப் பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிக் கூட்டம்

May 28, 2020 09:35:17 AM

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் வயல்களில் பயிர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.தற்போது ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளதாகக் கூறும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், கடந்த 26 ஆண்டுகளில் வெட்டுக்கிளிகள் தற்போது மிக மோசமான தாக்குதலை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மோசமான காலத்தில் தீவிரமான பூச்சித் தாக்குதல் என சுற்றுச்சூழல்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத்திய விவசாய அமைச்சகம் அளித்த தகவலின்படி, ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் 18, குஜராத்தில் இரண்டு மற்றும் பஞ்சாபில் ஒரு மாவட்டம் இது வரை வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 விளைநிலங்களை சூழ்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்தும், தீயணைப்பு மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பூச்சி மருந்து தெளித்தும் அவற்றை அழித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் புட்னி மற்றும் நஸ்ருல்லகஞ்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் பாத்திரங்களை அடித்து வருகின்றனர்.பிரயாகராஜில் தங்கள் வாகனங்களில் இருந்து சைரன்களை ஒலிக்குமாறு போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

 இந்த நிலையில் "ஜூன் - ஜூலை மாதங்களில் பருவமழை பெய்யும் முன் வெட்டுக்கிளிகள் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குநர் திரிலோச்சன் மொஹாபத்ரா, பலத்த காற்றின் உதவியுடன் மற்ற பகுதிகளுக்கும் இந்தப்பூச்சிகள் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப இழப்பீடு வழங்கவேண்டும் என வடமாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement