செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

உக்கிரம் தணியும் கொரோனா சிகிச்சை முடிந்து 45 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

May 21, 2020 06:34:39 PM

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். உச்சம் எட்டிய கொரோனாவின் உக்கிரம், கொஞ்சம் தணிந்து வருகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து, வீடு திரும்புவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் உயர, மற்றொரு பக்கம் வைரஸ் தொற்று பாதிப்பின் வேகம் கணிசமாக தணிந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 40 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. அதேநேரம், அங்கு உயிர்ப்பலி ஆயிரத்து 390 ஐ எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2- வது இடம் வகிக்கிறது.

குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 - ஐ தாண்ட, டெல்லியில் கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப், தெலங்கானா, பீஹார், கர்நாடகா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், ஏற்கனவே, 14 மாநிலங்கள் இடம் பிடித்திருக்க இந்த பட்டியலில் இப்போது ஒடிசாவும் இடம் பிடித்துள்ளது.

ஹரியானாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை எட்டும் நிலையில் உயர்ந்து வருகிறது.
கேரளாவில், கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 609 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஒரே நாளில் 132 பேர் பலி ஆனார்கள். 63 ஆயிரத்து 624 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை, சுமார் 45 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement