செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டம்

Apr 29, 2020 01:52:40 PM

கொரோனா தொற்று பரவி வருவதால், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக விமானங்கள், கப்பல்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 வளைகுடா பகுதிகளில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குவைத் பிரதமர் அல்-கலீத் அல்-ஹமத்தை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தொற்றுநோயின் தாக்கம் குறித்து அப்போது இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 34 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 26 லட்சம் பேர் என வளைகுடா பகுதியில் உள்ள 6 நாடுகளில் ஒரு கோடியே 26 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் கணிமான பகுதியினர் துறைமுக நகரங்களில் வசித்து வருவதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களை அனுப்பி தலா 1500 பேர் வீதம் என மொத்தம் 4500 பேரை அழைத்து வர வாய்ப்புள்ளது. துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் கடற்படை விமானங்களை அனுப்பி, மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக மாணவர்களை அழைத்து வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஏர் இந்தியா விமானம் மற்றும் கடற்படையினர் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களையும் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் கேரளாவிற்கு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர். பல்லாயிரக்கணக்கில் வருவோரை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த திட்ட அறிக்கை ஒன்றை கேரள அரசு தயார் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement