கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாகக் குணமடைந்ததால் கொரோனா இல்லாத மாநிலமாக ஆகியுள்ளது.
கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது ஆளுக்கு மீண்டும் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.
கொரோனா இல்லாத மாநிலமாகக் கோவாவை ஆக்குவதற்குத் தம்முயிரையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த், நலவாழ்வுத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே ஆகியோர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.