ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல், 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
அசாம் மாநில அறிவுறுத்தலின்படி அங்கு, மதுபான கடைகள் மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபடும் மதுபான கிடங்குகள் ஆகியவை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மேகாலயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுபான கடைகள் மற்றும் கிடங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கொரோனா முன்னெச்சரிக்கையாக குறைந்த பட்ச ஊழியர்களுடன் செயல்பட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.