செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,447 ஆகவும்: பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்வு

Apr 11, 2020 10:57:15 AM

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 447 ஆகவும், பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 188 பேர் குணமடைந்துள்ளனர். 110 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, 44 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில், 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 25 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 21 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 473 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 43 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில், 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 32 பேர் குணமாகியுள்ளனர். 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கேரளத்தில் இதுவரை 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 123 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மூவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஆந்திரத்தில் 363 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 7 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 308 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 31 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 207 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 177 பேருக்கும், பஞ்சாப்பில் 132 பேருக்கும், மேற்குவங்கத்தில் 116 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அசாமில் 29 பேருக்கும், மணிப்பூரில் இருவருக்கும், அருணாச்சலம், திரிபுரா, மிசோரமில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும், லட்சத்தீவு, தாத்ரா-நாகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களிலும் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்தியாவில் இதுவரை 7 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 643 பேர் குணமடைந்துள்ளனர். 239 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

 மேலும் தகவல் அறிய : https://news.google.com/covid19/map?hl=en-IN&gl=IN&ceid=IN:en


Advertisement
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement