செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சிறு, குறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முடிவு

Apr 09, 2020 10:12:07 AM

சிறு, குறு வணிகர்கள் பயன்படும் நோக்கில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது நிதித் தொகுப்பை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தகர்களுக்கு சந்தித்த இழப்பின் அளவை மதிப்பிட்ட பின்னர், பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தனி நிதித்தொகுப்பு அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், கடந்த மாதம், இந்தியா 1.7 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு  பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

இது நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க நேரடி பணப் பரிமாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு விரைவில் இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள அந்த அதிகாரி, அதன் மூலம் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன் பெறுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், 75ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்ட பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீதான மேல்வரி மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் இந்த நிதி ஒதுக்கப்படும் என்றும், தொழில்துறையினருக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மூலதனத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மிகக் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement