சீக்கியர்களின் புனிதநூலைப் பாடிப் புகழ்பெற்றவரான கியானி நிர்மல் சிங் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் மாரடைப்பால் காலமானார்.
வெளிநாட்டில் இருந்து பிப்ரவரி இறுதியில் நாடு திரும்பிய இவர் பொற்கோவிலில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின் டெல்லியிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
மார்ச் 30ஆம் தேதி மூச்சுத் திணறலால் அமிர்தசரஸ் குருநானக்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை நாலரை மணிக்கு அவர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவர் குடும்பத்தினர் அனைவரும் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.