செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வளைகுடாவில் இருந்து வந்தோரை.. பரிசோதிக்காததே கொரோனா பரவலுக்குக் காரணம்..!

Mar 30, 2020 07:25:38 PM

சவூதி அரேபியாவில் இருந்தும் துபாயில் இருந்தும் நாடு திரும்பியவர்களை முறையாகப் பரிசோதித்துத் தனிமைப்படுத்தாததே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 39 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 34 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துபாயின் நைப் என்னுமிடத்தில் தங்கி வேலை செய்துவிட்டு பிப்ரவரி மாதத்திலும் மார்ச் முதல் வாரத்திலும் நாடு திரும்பியவர்கள். தொடக்கத்தில் சீனா, தென்கொரியா, ஈரான், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீதே தீவிரக் கண்காணிப்பு இருந்தது.

மார்ச் இரண்டாம் வாரம் வரைக்கும் துபாய், சவூதி அரேபியா நாடுகளில் இருந்து வந்தவர்கள் விமான நிலையங்களில் காய்ச்சல் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதன் விளைவாகக் கடந்த பத்து நாட்களில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 20ஆம் தேதிக்குப்பின் காசர்கோட்டுக்கு வந்த ஆறாயிரத்து ஐந்நூறு பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 127 பேர் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் உள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் பாதிக்கு மேற்பட்டோர் வெளிநாடு சென்றுவந்தவர்கள். அதிலும் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர்கள்.

இதேபோல பீகார், குஜராத், தமிழ்நாடு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement