செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுழன்றடிக்கும் கொரோனா: பாதிப்பு படிப்படியாக அதிகரிப்பு

Mar 20, 2020 09:00:29 PM

நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223-ஆக அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்தியுள்ளன.

 சீனாவிலிருந்து உருவான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் இதுவரை 20 மாநிலங்களில் பரவியுள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, பஞ்சாப் ஆகிய இடங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 69 வயது பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் வதோதராவில் தலா ஒருவர் வீதம் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஸ்பெயின் நாடு சென்று திரும்பியவர் ஆவார். இன்னொரு நபர், அமெரிக்கா மற்றும் பின்லாந்து நாடுகளில் பயணம் செய்து திரும்பியவர் ஆவார்.

இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் 50 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்று 173ஆக இருந்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளது. இதில் 191 பேர் இந்தியர்கள் என்றும், 32 பேர் வெளிநாட்டினர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ, நொய்டா, கான்பூரில் மால்கள் மூடப்பட்டுள்ளன. அந்த 3 நகரங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் சேவை 22ம் தேதியன்று ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்துக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தொழிற்சாலைகளுக்கு 31ம் தேதி வரை வீடுகளில் இருந்தபடி பணியாற்ற ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து பொதுமக்கள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 9190131 51515 என்ற வாட்ஸ் அப் என்ற எண்ணை மத்திய அரசு தொடங்கியுள்ளது


Advertisement
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement