ஆண்களால் மட்டுமே செய்யக் கூடியதாக கருதப்படும் கடுமையான பணிகளையும் பெண்கள் சவாலாக ஏற்று சிறப்பாக செய்து காட்டுகின்றனர்.
ஹரியானாவில் பேருந்து ஓட்டுனர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அர்ச்சனா போன்ற இளம் பெண்களும் இத்தகைய கடுமையான சவாலை முறியடித்துக் காட்டியுள்ளனர். 5 வருடங்களாக பேருந்து ஓட்டி வருவதாக கூறுகிறார் அர்ச்சனா. பேருந்து நடத்துனராகவும் இவர் பணிபுரிகிறார். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில், வாடகைக் கார் ஓட்டுனர்களாக உள்ள பிங்கி, ஆர்த்தி, லதா போன்ற பெண்கள், தங்கள் வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, மனநிறைவை அளிப்பதாக கூறியுள்ளனர்.