செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டெல்லி கலவர வழக்கு : விசாரணை தீவிரம்

Mar 06, 2020 09:39:23 AM

டெல்லியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ள நிலையில், 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய வன்முறை, சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியதில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் இருந்தும் உடல் ஒன்று மீட்கப்பட்டது. வன்முறையில் காயமடைந்து குரு தேஜ் பகதூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். குரு தேஜ் பகதூர், ராம் மனோகர் லோஹியா, லோக் நாயக், ஜக் பிரவேஷ் சந்திரா ஆகிய 4 மருத்துவமனைகளில் 53 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 டெல்லியில் நிகழ்ந்த கலவரங்களில் ஈடுபட்ட 57 பேரை உத்தரப்பிரதேச போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். டெல்லி கலவரம் தொடர்பாக 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 1820 பேர் பிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லி கலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், வன்முறை கும்பல் மத்தியில் காவல்துறையினர் சிக்கி காயம் அடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இதே போன்று மருத்துவமனையை கைப்பற்றிய வன்முறையாளர்கள் பால்கனியில் இருந்து சுட்டதில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சாந்த் பாக் பகுதியில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த 50 போலீசாரை ஏராளமானோர் இருபுறமும் இருந்து வேகமாக ஓடிவந்து தாக்கியுள்ளனர். நடுவில் மாட்டி கொண்ட போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து தப்ப முயற்சித்துள்ளனர்.

இதனால், பின்வாங்கிய கலவரக்காரர்கள் மீண்டும் வந்து போலீசாரை விரட்டி விரட்டி கம்புகளை கொண்டும், கற்களை கொண்டும் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாரிகாட் அமைக்கப்பட்ட சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு ஒரு வழியாக தப்பி சென்ற போலீசார் மரங்கள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பாக பதுங்கினர். இந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement