செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் உறுதி

Feb 19, 2020 08:51:39 AM

வளர்ச்சித் திட்டப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்காக 350 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, காடுகளும், மரங்களும் அழிக்கப்படுவது இதே வேகத்தில் தொடர்ந்தால், வெகு விரைவில் நாம் அனைத்தையுமே இழந்துவிடுவோம் என்று தெரிவித்தது.

மரங்களை வெட்டி வீழ்த்தாமல் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மாற்று வழிகள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் செலவானாலும் மரங்களைப் பாதுகாப்பதற்காக இந்த செலவுகளை ஏற்பதில் தவறேதுமில்லை என்று குறிப்பிட்டனர்.

இயற்கையாக அமைந்த மற்றும் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நீராதாரங்களை அழிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த தலைமுறையினர் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த பூமியை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று சுட்டிக் காட்டினர்.

வளர்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் வளர்ச்சித் திட்டங்களும் மாற்று வழிகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் இதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்கும் என்று தெரிவித்தனர்.

வளர்ச்சித் திட்டத்துக்காக, மரங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்போது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு நடத்தப்படும் என்று தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்
திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் மரணம்.. கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு
இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள்
வாரணாசியில் இன்று ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
வனவிலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
பிரம்ம குண்டத்தில் உள்ள காவிரி நீருக்கு குங்குமம் மற்றும் புஷ்பார்ச்சனை

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement